பெரம்பூர்: பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே செம்பியம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுரளி மற்றும் ஒரு காவலர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை மடக்கியபோது, மது போதையில் இருப்பது தெரிந்தது. இதனால், ஆல்கஹால் அளவை காட்டும் கருவியை கொண்டு அவர்களுக்கு சோதனை செய்தனர். அப்போது, கருவி சரியாக வேலை செய்யாததால், அவர்களை ஓரமாக நிற்கும்படி கூறிவிட்டு, அந்த பக்கமாக வந்த மேலும் இருவரை மடக்கி பிடிக்க போலீசார் சென்றனர். அப்போது, உதவி ஆய்வாளரின் மொபட் மற்றும் ஆல்கஹால் அளவை காட்டும் கருவி,