புதுடெல்லி: ‘நீதிபதிகள் தங்கள் கொண்ட கொள்கையில் உறுதியுடனும், தங்களின் முடிவுகளில் அச்சமின்றியும் இருக்க வேண்டும்,’ என உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா கூறி உள்ளார். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா, ஆந்திர அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி, இம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார். இது, பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு நீதிபதி ரமணா, முதன்முதலாக நேற்று பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழகத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி காலமானார்.