சென்னை:கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் சி.டி.ரவி. இவருக்கு அண்மையில் பாஜவின் தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல் முறையாக சி.டி. ரவி நேற்று சென்னை வந்தார். தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் எல்.முருகன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜ மூத்த தலைவர் இல.கணேசன், பாஜ துணை தலைவர்கள் எம்.என்.ராஜா, சக்ரவர்த்தி, பொது செயலாளர் கருநாகராஜன், மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழக பாஜ தலைவர் எல்.முருகனுடன் சி.டி.ரவி முக்கிய ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இன்று காலை அவர் பாண்டிச்சேரிக்கு செல்கிறார். அங்கு பாஜ நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.