சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொறியியல் கல்லூரி மாணவி கொரோனா ஊரடங்கு விடுமுறையில் பழைய காலி பாட்டிகளில் அழகிய ஓவியங்களை வரைந்தும், கலைப்பொருட்களை உருவாக்கியும் கவனம் ஈர்த்து வருகிறார். காரைக்குடி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த தம்பதி உலகப்பன், கண்ணம்மாள். உலகப்பன் திருப்புவனத்தில் உதவி மின் செயற்பொறியாளராக உள்ளார். இவரது மகள் கீர்த்திகா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயதிலேயே ஓவியம் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர்; பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததும் ஓவியம் வரைவதை கைவிட்டார்.