தாமோ,:மத்தியபிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தின் பதாஹிர் கிராமத்தை சேர்ந்தவர் சுக்ரானி (45). இந்த பெண்ணுக்கு பிறந்த 15 குழந்தைகளில், 4 சிறுவர்களும் 4 சிறுமிகளும் மட்டுமே உயிருடன் உள்ளனர். மற்ற 7 குழந்தைகள் பிறந்த சில மணி நேரங்கள், நாட்கள், மாதங்களில் இறந்துவிட்டனர். இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான சுக்ரானி, தனது 16வது குழந்தையை பெற்றெடுக்க அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது.