திருவெறும்பூர்: திருச்சியை அடுத்த நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் பெண் காவலர் பயிற்சி பள்ளி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருநங்கையான புதுக்கோட்டையை சேர்ந்த சம்யுத்தா (25) காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகிறார். இந்த பயிற்சி கல்லூரியின் முதல்வராக உள்ள முத்துக்கருப்பன், துணை முதல்வர் மனோகரன் ஆகியோர் சம்யுத்தாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக சம்யுத்தா, காவலர் பயிற்சி கல்லூரி டிஐஜி சத்யபிரியாவிடம் தொலைபேசியில் புகார் செய்ததாகவும், டிஐஜி உத்தரவின்பேரில் தூத்துக்குடி எஸ்.பி ராமகிருஷ்ணன் நேற்றுமுன்தினம் திருச்சி வந்து சம்யுத்தா,பெரியகருப்பன், மனோகரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.