சென்னை: தொல்லியல் படிப்புக்கான தகுதிப் படிப்பு பட்டியலில் தமிழ் சேர்க்கப்பட்டதற்கு பிரதமருக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நொய்டாவில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்பொருள் நிறுவனத்தின் 2020-22ம் ஆண்டிற்கான இரண்டு ஆண்டு முதுகலை டிப்ளோமா தொல்பொருள் பாடநெறிக்கான குறைந்தபட்ச தகுதியில் ஒன்றாக தமிழில் முதுகலை பட்டத்தை சேர்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்ததற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.