சேலம்: தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இரு சக்கரங்களை பழுது பார்க்கும் ஒர்க்ஸ் ஷாப், இதை தவிர இரு சக்கர விற்பனை ெசய்யும் கம்பெனிகளில் ஒர்க்ஸ் ஷாப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஒர்க்ஸ் ஷாப்பை நம்பி 2 முதல் 3 லட்சம் பேர் உள்ளனர். ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து கடந்த ஜூன் 15ம் தேதி தொழிற்சாலைகள்செயல்பட தொடங்கின. பஸ் போக்குவரத்து இல்லாததால், தொழிலாளர்கள் வேலைக்கு தங்களது இரு சக்கர வாகனங்கள் மற்்றும் சைக்கிள்களையும் அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் சாலையில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. சேலத்தை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையாளர்கள் கூறியதாவது:
கொரோனாவுக்கு முன்பு அதிகபட்சம் பத்து கிலோமீட்டர் மேல் செல்பவர்கள் 90 சதவீதம் பஸ்சையே பயன்படுத்தினர். மீதமுள்ள 10 சதவீதம் பேர் தான் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தினர். ஆனால் கொரோனாவுக்கு பிறகு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று பயத்தால், பஸ்களில் பயணம் செய்ய பலர் தயக்கம் காட்டி வருகின்றனர்.