பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் எல்என்டி நிறுவனத்தில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களுக்கும் அப்பகுதியில் இறால் பண்ணை நடத்தி வருபவர்களுக்கு இடையில் கடந்த மாதம் 30ம் தேதி கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலை தடுக்க பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்ஐ விஷ்ணு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இருதரப்பினர் மீதும் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.