புதுடெல்லி: நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் பல்கலைக் கழக மானியக்குழுவின் (யுஜிசி) கட்டுப்பாட்டில் உள்ளன. அதன் உத்தரவுப்படியே இவை செயல்படுகின்றன. இருப்பினும், அதன் கட்டுப்பாட்டையும் மீறி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போலி பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றை கண்டுபிடித்து, யுஜிசி அடிக்கடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில், நேற்று அது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு கொண்டிருக்கும் 24 பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களை போலி என அதிரடியாக அறிவித்துள்ளது. இவற்றில் 8 பல்கலைக் கழகங்கள் உத்தர பிரதேசத்திலும், 7 பல்கலைக் கழகங்கள் தலைநகர் டெல்லியிலும் உள்ளன.