ஆம்பூர்: ஆம்பூர் அருகே உள்ள நரியம்பட்டில் அரசினர் சமுதாய சுகாதார மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் பிரசவம் மற்றும் நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். இந்த மருத்துவமனையை சுற்றி அடர்ந்த செடி, கொடிகள் நிறைந்து புதர் காணப்படுகிறது. நேற்றிரவு சுமார் 10 மணியளவில் மருத்துவமனைக்குள் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நுழைய முயன்றது. இதனை அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் பார்த்து கூச்சலிட்டனர். தகவலறிந்த உமராபாத் போலீசார், உடனடியாக ஆம்பூர் வனசரகர் மூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனக்காப்பாளர்கள் ராஜ்குமார்,