சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது ஏற்பட்டதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம்-கர்நாடகம் இடையே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் இருந்து பேப்பர் பாரம் ஏற்றிய லாரி சிவகாசி செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. லாரி நேற்று மதியம் 1 மணியளவில் திம்பம் மலைப்பாதை 26வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது டயர் வெடித்து நகர முடியாமல் நின்றது.