அபுதாபி: நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2020 போட்டியில் மும்பை அணியுடன் ராஜஸ்தான் அணி மோதியது. எனவே இந்த போட்டியில் தாமதமாக பந்துவீசியதாக ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் கேப்டன் விராட் கோலி, டெல்லி கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோருக்கு தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.