தேனி சென்றிருந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ் சென்னை திரும்பினார்

சென்னை: தேனி சென்றிருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். அக்டோபர் 7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் சென்னை திரும்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் என்று 18 அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நாளை சென்னை வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை அடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னையை நோக்கி படையெடுத்துள்ளனர். மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மாலையில் முதல்வரை சந்தித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஓ.பி.எஸ் நிலைப்பாட்டை அறிய ஆதரவாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Related Stories: