புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த இந்திய வீரர்கள் 20 பேருக்கு, போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள இடங்களை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. இதை கலோனல் சந்தோஷ் பாபு தலைமையிலான இந்திய வீரர்கள் தடுக்க முயன்றனர். இது மோதலாக மாறியதால் கற்கள், இரும்பு ராடுகள் உள்ளிட்ட பல ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர் சீன வீரர்கள். இதனால், பதில் தாக்குதலில் இறங்கிய இந்திய வீரர்கள், சீன ராணுவத்தினரை போராடி விரட்டினர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 18 வீரர்கள் காயமடைந்தனர். சீனாவின் தரப்பில் இதுவரை உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்களை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனினும், 35 சீன ராணுவத்தினர் உயிர் இழந்திருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளது.