ஓமனிலிருந்து திரும்பிய கேரள தொழிலாளிக்கு 2ம் முறை கொரோனா

திருவனந்தபுரம்: ஓமன் நாட்டில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த தொழிலாளி 2வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள  மாநிலம் திருச்சூர் அருகே பொன்னுக்கராவை சேர்ந்தவர் சாவியோ ஜோசப்.  இவர்  ஓமனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவர் ஏற்கனவே  கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம்  அவர் ஓமானில் இருந்து வீடு திரும்பினார். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில்  கொரோனா இல்லை என தெரியவந்தது. இந்நிலையில் அவருக்கு மீண்டும்  கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து சந்தேகம் அடைந்த அவர்  பரிசோதனை செய்து கொண்டார்.

இதில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று  ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: