தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்(20)32 2018ம் ஆண்டு முதல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை ஒருப் போட்டியில் கூட சுந்தர் முழுமையாக 4ஓவர்களும் பந்து வீச கேப்டன் கோஹ்லி அனுமதித்ததில்லை. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியும், சுந்தருக்கு 2ஓவர்கள் மட்டுமே தரப்பட்டது. அதுமட்டுமலல் சர்வதேச டி20 போட்டிகளிலும் சுந்தருக்கு 4ஓவர்கள் பந்து வீச கேப்டன் கோஹ்லி வாய்ப்பு தருவதில்லை. கடந்த ஆண்டு கோஹ்லி ஓய்வில் இருக்க, ரோகித் சர்மா கேப்டனாக இருந்த போதுதான் சுந்தருக்கு 4 ஓவர்கள் முழுமையாக பந்து வீச வாய்ப்பு தந்தார்.