கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலம் தியோரியா அடுத்த கவுரி பஜாரைச் சேர்ந்த 26 வயதுடைய கர்ப்பிணி பெண், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு 4 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 3 குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, பிஆர்டி மருத்துவக் கல்லூரி முதல்வர் கணேஷ்குமார் கூறுகையில், ‘கவுரி பஜார் பகுதியைச் சேர்ந்த அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பிரசவ வலி ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.