சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 3 வெளிநாட்டினர் கைது

கவுஹாத்தி: சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 3 நைஜீரிய நபர்களை அஸ்ஸாம் போலீசார் கைது செய்துள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பசரிசேரா போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார், கவுஹாத்தியில் உள்ள சுரைபரி செக் பாயிண்ட் என்னும் தேசிய நெடுஞ்சாலை 8ல் உள்ள பகுதியில் நேற்று நடத்திய சோதனையின் போது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த 3 பேரிடம் சோதனை நடத்தினர். அவர்கள் எந்த விதமான அனுமதியும், பாஸ்போர்ட்டும் இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்தது.

அந்த 3 நைஜீரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் நநாம்டி பெர்னார்டுநவாலி, பிரிின்ஸ்பால், இசேகோலின்ஸ் என்பதும் அவர்கள் மூவரும் திரிபுரா வழியாக வங்கதேசம் வந்து பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: