ஆந்திரா: திருப்பதியில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி கோலகலமாக பூசைகள் நடைபெறும். அதிலும், புரட்டாசி மாதம் மிகவும் சிறப்பான முறையில் பிரம்மோத்சவ விழா கொண்டாடப்படும். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸின் தாக்கத்தால், பக்தர்கள் இன்றி, வெளிப் பிராகரத்தில் வீதி உலா இல்லாமால் ஆலயத்திற்குள்ளேயே விழா கொண்டாடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் இணைந்திருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.