குன்னூர்: குன்னூரில் சேவல் கொண்டை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதை, சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள். குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் மலைகளுக்கு இடையே பூத்துக் குலுங்கும் பல வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இதில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான வழியில், தேயிலை தோட்டங்களுக்கு இடையில் ‘ஸ்பேத்தோடியா’ என அழைக்கப்படும் சேவல் கொண்டை மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இது சாலையில் பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மேலும், பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு இடையே சிவப்பு நிறத்தில் பூத்துள்ளது.