பாட்னா: நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் விரைவாக நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் பீகார் மாநில டி.ஜி.பி., பாரதிய ஜனதாவில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். பீகார் மாநில போலீஸ் அதிகாரி குப்தேஷ்வர் பாண்டேவின் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை பீகார் அரசு நேற்று ஏற்றுக்கொண்டது. 3 மாத நோட்டீஸ் கால அவகாசத்திலிருந்தும் அவருக்கு விலக்கு கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பாட்னாவில் பேசிய அவர், தமது ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட மக்களின் கருத்தை கேட்ட பிறகே தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வேன் என்றார். மேலும் இதுவரை எந்த கட்சியிலும் சேரவில்லை என்று குப்தேஷ்வர் பாண்டே குறிப்பிட்டார்.