ஆசாமி அடித்துக்கொலை?

திருத்தணி: திருவாலங்காடு, பழையனூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சிறிய பாலத்தின் கீழ் நேற்று முன்தினம் மாலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அவ்வழியே சென்றவர்கள் இதை பார்த்து திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போதை தலைக்கேறியதால் பாலத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தாரா அல்லது யாராவது அடித்து கொலை செய்துவிட்டு வீசிவிட்டு சென்று விட்டார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் கட்டம் போட்ட சட்டை, லுங்கி அணிந்திருந்தார். அவருக்கு சுமார் 40 வயது இருக்குமென்று கூறப்படுகிறது.

Related Stories: