ஐபிஎல்2020; சென்னை அணிக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

ஷார்ஜா: ஐபிஎல் டி20 தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் சென்னை அணிக்கு 217 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. ஷார்ஜாவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள், சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.

Related Stories: