அறந்தாங்கி: மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் மணமேல்குடியில் குடிநீர்பிரச்சினையை தீரப்பதற்காக, மணமேல்குடி கிராம ஊராட்சி சார்பில் கிராம ஊராட்சி பொதுநிதியில் இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 1040 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு, ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில், பம்ப்ரூம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர்விடப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பணியை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்தக்காரர், 1040 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணற்றை அமைத்து, குழாய் பதித்தார். பின்னர்அவர்ஆழ்துளை கிணறு அமைத்ததற்கான பட்டியலை கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார். அவரது பட்டியலை பெற்ற கிராம ஊராட்சி நிர்வாகம் இதுவரை ஆழ்துளை கிணறு அமைத்த ஒப்பந்தக்காரருக்கு பணி செய்ததற்கான பணத்தை கொடுக்கவில்லை. ஆழ்துளை கிணறு அமைத்ததற்கு பணம் வழங்கப்படாததால், அந்த ஒப்பந்தக்காரர் பம்ப் ரூம் கட்டி, மின்இணைப்பு பெறவில்லை.