டெல்லி: ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏதுவாக டெல்லி தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு உரிய உபகரணங்களை வழங்கவும், இணைய வசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் குழந்தைகளுக்கு ஆன்லைன் வழி கல்வியை கற்க ஏற்பாடு செய்யப்பட்டன. இருப்பினும் அவை ஏழை குழந்தைகள் கல்வி கற்கும் வகையில் ஏதுவாக அமையவில்லை. இதனால் பல குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியானது. இதனையடுத்து, ஏழை குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதால், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் அவைகளுக்கு உரிய உபகரணங்களை வழங்க உத்தரவிடக்கோரி, பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.