சென்னை: போலி நிறுவனங்கள் மூலம் 740 கோடி வணிகம் நடந்ததாக கணக்கு காட்டி 107 ஜி.எஸ்.டி வரி சலுகை பெற்ற சென்னை தொழிலதிபரை ஜி.எஸ்.டி அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை கொடூங்கையூரை சேர்ந்த 54 வயது தொழிலதிபர் ஒருவர், தனது நிறுவனங்களில் 740 கோடி வணிகம் நடந்ததாக சென்னையில் உள்ள ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகத்தில் கணக்குகாட்டியுள்ளார். அதன்படி அந்த தொழிலதிபர் 107 கோடி ஜிஎஸ்டி வரிசலுகை பெற்றுள்ளார். பின்னர் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொழிலதிபர் ஆணையர் அலுவலகத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.