அருங்குளம் ஊராட்சியில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

திருவள்ளூர்: திருவாலங்காடு ஒன்றியம், அருங்குளம் ஊராட்சியில் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன் தலைமையி வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். விழாவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.மகாலிங்கம், ஒன்றிய நிர்வாகிகள் லஷ்மாபுரம் குமரவேலன், அர்ஜூணன், லோகநாதன், பஞ்சாட்சரம், இளைஞர் அணி அமைப்பாளர் காஞ்சிபாடி ஆர்.யுவராஜ், ஜி.பாபு, பி.ஆர்.பாபு, அம்பேத், பார்த்திபன், சரவணன், ச.இளஞ்செழியன், கேசவன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: