எடப்பாடி ஆதரவு போஸ்டர்கள் கிழிப்பு: தேனியில் பரபரப்பு

தேனி: தேனியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர் நேற்று கிழித்தெறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அரப்படித்தேவன்பட்டி பகுதியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நேற்று முன்தினம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், ‘எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதை படித்த பின்னராவது திருந்தட்டும்’ எனும் தலைப்பில் அரசின் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டிருந்தனர். போஸ்டரில் பெரிய அளவில் எடப்பாடி பழனிசாமி, சிறிய அளவில் ஓ.பன்னீர்செல்வம் படம் இடம் பெற்றிருந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டத்தில், எடப்பாடிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று காலை இந்த போஸ்டர் கிழித்தெறியப்பட்டது. இதனை கிழித்தது ஓபிஎஸ் ஆதரவாளர்களா அல்லது வேறு யாரேனுமா என்ற சர்ச்சை தற்போது வெடித்துள்ளது.

Related Stories: