ஸ்வீடன் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் நியமனம்

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் முன்னாள் நட்சத்திரம் ஜான்டி ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக உள்ள ஜான்டி ரோட்ஸ் (51), ஐபிஎல் தொடர் முடிந்ததும் குடும்பத்துடன் ஸ்வீடனில் குடியேற உள்ளார். இது குறித்து ரோட்ஸ் கூறுகையில், ‘ஸ்வீடன் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

சரியான நேரத்தில் இந்த பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. கிரிக்கெட் அவ்வளவாக வளர்ச்சி அடையாத நாட்டில், எனது பங்களிப்பு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. இந்த வாய்ப்புக்காக ஸ்வீடன் கிரிக்கெட் வாரியத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குடும்பத்துடன் ஸ்வீடன் செல்லும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு ரோட்ஸ் கூறியுள்ளார்.

Related Stories: