இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரசில் எம்எல்ஏ தலைமையில் குழு: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:

மறைந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் 63வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக  காங்கிரஸ் சார்பில் இன்று (11ம்தேதி) காலை 11 மணியளவில் அஞ்சலி செலுத்த எஸ்.மலேசியா பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வி.எஸ்.காளிமுத்து, ஜே.ஜி.பிரின்ஸ், எஸ்.ராஜேஷ்குமார், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், எஸ்.சி. துறை தலைவர்  செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் டாக்டர் கே.ஐ. மணிரத்தினம், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.தெய்வேந்திரன், செல்லத்துரை அப்துல்லா, கே.ஓ.ஆர்.செந்தாமரைக்கண்ணன், சாயல்குடி வேலுச்சாமி, ஜே.எஸ்.ரமேஷ்பாபு, பி. பாக்கியராஜ், எம்.பி.ரஞ்சன்குமார், வே.சரவணகாந்தி, ராஜசேகர், அஜீஸ் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: