துபாய்: ஊரடங்கு காலத்தில் கிடைத்த ஓய்வில் உடல்தகுதியை மேம்படுத்திக் கொண்டதால் வலுவாக இருப்பதாக உணர்கிறேன் என்று டெல்லி கேப்பிடல்ஸ் வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா (தென் ஆப்ரிக்கா) கூறியுள்ளார். ஐபிஎல் டி20 தொடர் வரும் 19ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணி வீரர்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் செப். 20ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. டெல்லி அணிக்காக விளையாட உள்ள ரபாடாவின் தனிமைப்படுத்தல் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பயிற்சியை தொடங்கிய அவர் கூறியதாவது: களத்தில் இறங்கி ஓடுவதும், சக வீரர்களுடன் பயிற்சி செய்வதும் உற்சாகம் அளிக்கிறது.