விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து : 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி உட்பட 3 பேர் பரிதாப பலி.!

கடலூர்:  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே காரும் வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்ட சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று மதியம் 12 மணியளவில் மீன்களை ஏற்றி வந்த வேனும், காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் சிக்கிய 5 பேர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது கடலூரிலிருந்து மீன்களை சேலத்திற்கு ஏற்றி சென்ற வேனும், சேலத்திலிருந்து ஒரு குடும்பத்தினர் விருத்தாசலத்தில் உள்ள கோவிலுக்கு காரில் செல்லும்போதும்தான் இந்த கோர விபத்தானது நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து, கோர சம்பவமானது விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேப்பூர் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வாகனங்கள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த கோர சம்பவமானது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும் அச்சத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: