திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது. இக்கோவிலில் ஆண்டு தொறும் நடைபெறும் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனால், கொடியேற்றம் விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகளினால் அரசு அறிவித்த நெறிமுறைகளின்படி நடைபெறுகிறது.