காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை முகாம் துவக்கம்: முன்னாள் எம்பி தொடங்கி வைத்தார்

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், இளைஞர் பாசறை முகாம் கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் நடந்தது. காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான கஜா (எ) கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்கள் கீரப்பாக்கம் அரிகிருஷ்ணன், குமிழி ஜான்சன், வேங்கடமங்கலம் ரவி, ஊனமாஞ்சேரி லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் வார்டு கவுன்சிலர் ஏ.ஜே.கே.பாலாஜி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்பி கே.என்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு இளைஞர் பாசறை முகாமை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், இளைஞர்கள் புதிய உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். மேலும், மாற்று கட்சிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் எம்பி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கன்னியப்பன், கண்ணப்பன்,  முன்னாள் வார்டு உறுப்பினர்கள் ஏழுமலை, சாமிநாதன், குணசேகரன், கண்ணன், செந்தில், நிர்வாகிகள் ஏ.பி.கே.ரகு, ரங்கன், உதயகுமார், கோவிந்தன், பாபு, குமார், ஜெயகணேஷ், சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், குமிழி ஆகிய ஊராட்சிகளிலும் இளைஞர் பாசறை முகாம் நடந்தது.

Related Stories: