போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தேவையான கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றித்தருவார் என்பதால் பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் தெரிவித்தார். திருவாரூரில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். நீட் விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முதல்வர் முடிவெடுப்பார் எனவும் அவர் கூறினார்.

Related Stories: