ராஞ்சி: டெல்லியில் இருந்து ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஜ்தானி விரைவு ரயில், ராஞ்சி நகருக்கு வந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இருந்து வியாழக்கிழமை காலை புறப்பட்ட விரைவு ரயில், டால்டோன்கஞ்ச் பகுதியில் நடந்த போராட்டம் காரணமாக ரயில் தொடர்ந்து இயங்க முடியாமல் பாதி வழியில் நின்றது. ரயிலில் இருந்த 930 பயணிகளும் பேருந்து மூலம் ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், ஒரே ஒரு பெண் பயணி அனன்யா என்பவர், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்த மாற்று பேருந்து போக்குவரத்தை ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன் தான் ரயிலிலேயே செல்வேன் என்றும் திட்டவட்டமாக கூறினார்.மேலும், ரயில் பயணத்துக்குக் கட்டணம் செலுத்தி உள்ளதாகவும், பேருந்தில் பயணிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.