துபாயில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே அணியில் கொரோனா தொற்று இல்லாத வீரர்களும் கூடுதலாக ஒரு வாரம் தனிமையில் இருந்தனர். அதன்பிறகு நடந்த 2 சோதனையிலும் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. அதனால் அவர்கள் நேற்று காலை முதல் சக வீரர்களுடன் ஒன்றாக உணவு உண்பது, பேசுவது என்று இயல்பு நிலைக்கு திரும்பியதுடன் மாலையில் பயிற்சியை தொடங்கினர். தொற்று ஏற்பட்டுள்ள வீரர்கள் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்ததும், சோதனைகளில் தொற்று இல்லை என்பது உறுதியான பிறகு பயிற்சியில் இணைவார்கள்.