சென்னை: பி.இ செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை வரும் 19ம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டித்து அறிவித்திருக்கிறது. அபாரதத்துடன் செலுத்துவதற்கான கெடு நாளை முடியும் நிலையில் செப்டம்பர் 19ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் நவம்பர் பருவத்தேர்வுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி நாளாக ஆகஸ்ட் 31ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 2ம் தேதி வரை அபாரதத்துடன் கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்டு 5ம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.