லக்னோ: உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் கபீல் கானுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கபீல் கானின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட கபீல் கான் 8 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் விதமாக உரையாற்றியதாக மருத்துவர் கபீல் கான் மீது அலிகர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம்
- கபில் கான்
- அலகாபாத் உயர் நீதிமன்றம்
- கபீல் கான்
- உத்திரப்பிரதேசம்
- பேச்சு
- என்.எஸ்.ஏ.
- ஐகோர்ட் உத்தரவுகள்
- சிஏஏ
- அலகாபாத்