திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் கிராமத்தில், இருளர் பழங்குடியினர் குடியிருப்பு அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனை சீரமைத்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. திருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் கிராமத்தில் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 54 குடும்பத்தினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, சாலையோரங்களிலும், மலையடிவாரங்களிலும் வசித்து வந்த இருளர் பழங்குடி மக்கள் செம்பாக்கம் கிராமத்தில் வழங்கப்பட்ட மனைப்பிரிவில் குடிசை வீடு கட்டி குடியேற தொடங்கினர்.
திருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத இருளர் பழங்குடியினர் குடியிருப்பு: விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- வசதிகள்
- திருப்பூரு யூனியன் இருண்ட பழங்குடியினர் வீட்டுவசதி
- செம்பாக்கம் கிராமம்
- அவசர நடவடிக்கைக்கு வலியுறுத்துதல்
- செம்பாக்கம் கிராமம்