மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் சென்னை, மும்பை அணிகளை தொடர்ந்து ஐதராபாத், டெல்லி அணி வீரர்களும் யுஏஇ புறப்பட்டுச் சென்றனர். கொரானா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி, செப்.19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடைபெற உள்ளது. அதற்காக ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களுடன் யுஏஇ செல்லத் தொடங்கியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் கடந்த 21ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.