மும்பை: டெல்லி மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள மும்பை உயர்நீதிமன்றம், இந்தியாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு வெளிநாட்டினரை பலிகடா ஆக்க முயற்சி நடைபெறுவதாக விமர்சித்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாம்முதின் பகுதியில் கடந்த மார்ச் மாதம் இஸ்லாமியர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், கொரோனா உத்தரவை மீறியதாக கூறி வெளிநாட்டு இஸ்லாமியர்கள் 29 பேர் மீது மும்பை காவல்துறை பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 29 பேர் மீதான எஃப்.ஐ.ஆர். ரத்து!: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரபரப்பு உத்தரவு..!!
- வெளிநாட்டவர்கள்
- மாநாடு ரத்து
- நீதிபதிகள்
- எப்.ஐ.ஆர்
- மும்பை உயர் நீதிமன்றம்
- தில்லி
- ரத்து
- இஸ்லாமியவாதிகள்