அண்ணாநகர்: சென்னை நகரில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி, அண்ணாநகர் காவல் எல்லையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அரும்பாக்கம், வள்ளுவர் நகரில் நேற்று முன்தினம் மாலை ஒரு பிரபல ரவுடி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரும்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் சங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரவுடியை சுற்றி வளைத்தனர்.