புதுடெல்லி: உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு: இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரின் அவதாரத் திருநாள், விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. உற்சாகமும், மகிழ்ச்சியுமாய் கொண்டாடப்படும் இந்த திருநாள், நாட்டு மக்களிடையே சகிப்புத்தன்மையை உருவாக்கட்டும். கொரோனா நோய் தொற்றால் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறோம்.