சின்னமனூர்: சின்னமனூரில் நீர்வரத்துக் கால்வாயான பிடிஆர் கால்வாயில் குப்பைகளுடன் கழிவுநீர் தேங்கியிருப்பதால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சின்னமனூரில் சொக்கநாதபுரத்திலிருந்து வ.உ.சி தெரு மற்றும் சாமிகுளம் வழியாக 2 கி.மீ தூரத்திற்கு பி.டி.ஆர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் இருபுறமும் சாமிகுளம், வ.உ.சி தெரு, காந்திநகர, சொக்கநாதபுரம் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த கால்வாய் வழியாக பாசன நீர் செல்லும். இந்நிலையில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை பிடிஆர் கால்வாய்க்குள் கலக்குகின்றனர்.