புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்திருந்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தோனிக்கு வாழ்த்து தெரிவித்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு புகழாரத்தை சூட்டியுள்ளார். அந்த வகையில், நீங்கள் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டிருக்கிறீர்கள் என்று தோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சிறந்த தலைமை பண்பு, விக்கெட் கீப்பிங் திறமைக்காக வரலாற்றில் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் என்றும் கடந்த ஆண்டுகளில் இந்திய அணிக்காக தோனி விளையாடியது மிகவும் பெருமைமிக்கது.