தஞ்சை: தஞ்சாவூர் ஆர்.டி.ஓ. வேலுமணி உள்ளிட்ட சில அதிகாரிகள் நேற்றுமுன்தினம் அருளானந்த நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரியாணி சென்டருக்கு சாப்பிட சென்றனர். அப்போது ஆர்.டி.ஓ., பன்னீர் பட்டர் மசாலா கிரேவியை ஆர்டர் செய்து சாப்பிட வாங்கியுள்ளார். சாப்பிடும்போது ஊசிப்போன வாடை வந்துள்ளது. இதயைடுத்து ஆர்.டி.ஓ, அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்கும்போது சரியான பதில் சொல்ல மறுத்துள்ளதோடு, கிரேவி நன்றாக தான் உள்ளது. தவறாக கூற வேண்டாம் என ஊழியர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்செட்டான ஆர்.டி.ஓ., இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி புஷ்பராஜனிடம் தகவல் தெரிவித்தார்.