நீட் குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஸ்ரீ தற்கொலை; பெற்றோரிடம் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

சென்னை: நீட் குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஸ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுபஸ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: