கரூர்: கொரோனா ஊரடங்கு காரணமாக வாங்க ஆளில்லாத காரணத்தினால் வாழைத்தார் ரகங்கள் குறைந்த விலைக்கே ஏலம் விடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கரூர் ரயில் நிலையம் செல்லும் வழியில் வாழைத்தார் கமிஷன் மண்டி செயல்படுகிறது. இங்கு கரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகளால் கொண்டு வரப்படும் வாழைத்தார்கள் தேவைக்கேற்பவும், வரத்துக்கு ஏற்பவும் ஏலம் விடப்பட்டு வருகிறது.